சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500, வழங்கும் திட்டத்தை கடந்த 20ம்தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் கடந்த 4ம் தேதி முதல் வழங்கப்பட்டது. இதை வாங்க முடியாதவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இதற்கான தேதியை வரும் 25ம்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.