புதுடெல்லி: விமானப்படைக்கு வலுசேர்க்க 29 மிக், 12 சுகாய் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சீனா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய விமானப்படையை வலுவாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக பிரான்சிடமிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட நிலையில், ரூ.48,000 கோடியில் 83 தேஜஸ் விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.