சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் அவமதித்த விவகாரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்று இசையமைப்பாளர் தினா குற்றம் சாடியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; பிரசாத் ஸ்டூடியோவின் இடத்தை இளையராஜா கேட்கிறார் என்பது தவறான தகவல். 45 ஆண்டுகள் இசையமைத்து வந்த இடத்திற்குள் இளையராஜாவை நுழைய விடாமல் தடுத்த பிரசாத் ஸ்டூடியோ இசை கருவிகள் இசை கோப்புகளை கூட எடுக்க விடாமல் அவமானப்படுத்தி வெளியேற்றியதாக விமர்சனம் செய்தார்.