லாகூர்: இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்பு சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட், ஓய்வுக்கு பின் 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். அப்போது திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து ஊக்குவித்து வலுவான இந்திய அணியை கட்டமைக்க உதவியாக இருந்தார். தற்போது டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார். இந்நிலையில் லாகூரில் நடந்த விழா ஒன்றில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித்அப்ரிடி, இந்தியா ஏ அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய டிராவிட்டின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுமாறு நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை வலியுறுத்தினார்.