சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி காங்கிரஸ் சார்பில் இன்று சைதாப்பேட்டையிலிருந்து கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடக்கிறது. மத்திய பாஜ அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரியும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை பல மடங்கு மக்கள் மீது சுமையை ஏற்றியதை கண்டித்தும் சென்னை, சைதாப்பேட்டை சின்னமலை அருகில் உள்ள ராஜிவ்காந்தி சிலை அருகில் காங்கிரஸ் சார்பில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.