ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், பார்மரின் நகோடா பகுதியில் இருந்து அஜ்மெர் பிவார் நோக்கி கடந்த சனியன்று இரவு தனியார் பேருந்து புறப்பட்டது. இதில், 40 பேர் பயணம் செய்தனர். மகேஷ்புரா என்ற கிராமத்துக்கு பேருந்து வந்தது. அப்போது, அந்த பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பியின் மீது பேருந்தின் மேற்கூரை உரசியது. இதனால், பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் அலறி அடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். எனினும், தீயில் சிக்கிய 6 பயணிகள் உடல் கருகி பலியாகினர். மேலும், 30 பேர் காயமடைந்தனர்.தீ விபத்தில் இறந்தவர்கள் நகோடாவில் உள்ள ஜெயின் கோயிலுக்கு சென்று விட்டு பிவார் திரும்பி வந்து கொண்டு இருந்ததாக தெரிகிறது.