புரட்சி பாரதம் கட்சியின் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் பூந்தமல்லி ஹோட்டல் ஹைவேயில் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி தலைவர் செஞ்சி ஜெ.ஜவகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காட்டுப்பாக்கம் எஸ்.டேவிட், மாவட்ட அமைப்பாளர் தொழுவூர் டி.எம்.எஸ்.கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியினுடைய 43ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் வருகின்ற பிப். 1ம் தேதி வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் நடைபெற உள்ளது. இதில் சிறப்புரையாற்ற வருகைதரும் கட்சி தலைவருக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிப்பது, இளைஞரணி சார்பில் அனைவரும் திரண்டு சென்று கலந்து கொள்வது முடிவு எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: