ஊத்துக்கோட்டை: பூந்தமல்லி பாப்பன்சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர், அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் இருந்தனர். ஜெயச்சந்திரன் (16), 11ம் வகுப்பும், மனோஜ்குமார் (12), 6ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த சேத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறுவர்கள் இருவரும் அங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் குளிப்பதற்காக தனது தாத்தாவை அழைத்துக்கொண்டு சென்றனர்.