பொங்கல் விழாவில் தமிழிசை பங்கேற்பு

சென்னை: பீர்க்கன்காரணை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாள் மற்றும் பொங்கல் விழா எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகள் கீதா மதுமோகன் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக, பள்ளிகளில் தற்காப்பு கலை பாடமாக்கப்பட வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுவித்தார். மேலும், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி, மரியாதை செலுத்தினார். பின்னர் அப்பகுதியை சேர்ந்த பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்.

Related Stories: