திருச்சி: கொரோனா பாதிப்பை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவதே தமிழக அரசின் இலக்கு என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா தெற்றுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாடு முழுவதும் நேற்று தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 166 முகாம்களில் நேற்று காலை துவங்கியது. அவ்வகையில், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இன்று 2வது நாளாக கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசியினை போட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவுக்காக போடப்படும் 2 தடுப்பூசிகளுமே மிகவும் பாதுகாப்பானது என்றார்.