சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா மதுவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவம்மா. இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரிடம் இதே கிராமத்தை சேர்ந்த நஞ்சமணி என்பவர் ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றார். கடன் பெற்ற பணத்தை கொடுக்காமல் அட்சியமாக இருந்தார். இது விஷயமாக இவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இவர்களை கிராமத்தினர் சமதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் சிவம்மா வெளியே சென்றார். அப்படி சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.