அஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி: எம்.பிக்கு பாராட்டு

சென்னை:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் தேர்வுகள்  ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத முடியும் என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து,  இத்தேர்வுகள் தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை  எம்பி வெங்கடேசன், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு கடிதம் எழுதியதன் விளைவாக தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  மத்திய அரசின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு சென்ற எம்பி வெங்கடேசனுக்கு பாராட்டுக்கள்.

Related Stories: