நீலகிரி: கோத்தகிரி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியின் காதை கடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓரசோலையை சேர்ந்த தொழிலாளி சாந்தகுமார் என்பவரின் காதைக்கடித்து துப்பிய சக்தி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சக்தி என்பவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் சூர்யா,தாய்மாமன் பால்ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.