சென்னை: மார்கழி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மக்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகையை அரசு அறிவிக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்குவதை அரசு உறுதி செய்யவேண்டும் என திமுக தலைவர் தெரிவித்துள்ளார். விவசீகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையையும் தாமதம் இன்றி கிடைக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்,