×

உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்!!

அலங்காநல்லூர்:  பொங்கல் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று,  உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மதுரை அவினியாபுரம், பாலமேடு என ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் சீறி வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்கினர். பல காளைகள், காளையர்களுக்கு அடங்காமல், சீறி கொண்டு சென்றன.

இந்நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8.30 மணி அளவில்  தொடங்கியது. முன்னதாக அலங்காநல்லூரில் முனியாண்டி கோயில் காளைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர். பின்னர், ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி மதுரை ஆட்சியர் அன்பழகன் உறுதி மொழி வாசிக்க முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதையடுத்து போட்டி தொடங்கப்பட்ட நிலையில்,  முதலில் கோயில் காளைகள் வாடிவாசலில் சீறி பாய்ந்தன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர்  கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுபிடி வீரர்கள் மற்றும் 655 காளைகள் பங்கேற்கின்றனர்.இங்கு 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் மருத்துவ பணியில் உள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடிவீரர், காளை உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. பைக், தங்க காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், டிவி, பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட பரிசுகளும் தரப்படுகின்றன. பார்வையாளர்களுக்காக வாடிவாசலில் இருபுறமும் 300 மீட்டர் நீளம், 8 அடி உயரத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, தனிமனித இடைவெளியுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பலத்த 3000க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளனர்.


Tags : Palanisamy ,Panneer Selvam ,Madurai Alankanallur Jallikkattu ,world , Madurai, Alankanallur, Jallikattu
× RELATED எடப்பாடி கொடுத்த ‘சீக்ரெட் சிக்னல்’...