பெங்களூரு: கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளியை அடுத்த தார்வார் தேசிய நெடுஞ்சாலை 4ல் உள்ள இட்டிகட்டி என்ற கிராமத்தின் அருகே நேற்று அதிகாலை மினி வேன் மீது டிப்பர் லாரி ஒன்று மோதியது. இதில், 2 வாகனங்களும் நொறுங்கின. மினி வேனில் சிக்கி உயிருக்காக போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு மீட்பு படையினர் அனுப்பினர். அதற்கு முன்பாகவே, வேனில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும், 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் தாவணகெரே மாவட்டம், வித்யாநகரை சேர்ந்தவர்கள் என்றும், அனைவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்றும் தெரிய வந்தது.