×

சுற்றுலா சென்ற போது கோர விபத்து: பள்ளித் தோழிகள் 13 பேர் பரிதாப பலி: மேலும் 3 பேர் கவலைக்கிடம்

பெங்களூரு: கர்நாடக  மாநிலம், ஹூப்பள்ளியை அடுத்த தார்வார் தேசிய நெடுஞ்சாலை 4ல் உள்ள  இட்டிகட்டி என்ற கிராமத்தின் அருகே நேற்று அதிகாலை மினி வேன் மீது டிப்பர்  லாரி ஒன்று மோதியது.  இதில், 2 வாகனங்களும் நொறுங்கின. மினி வேனில்  சிக்கி  உயிருக்காக போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு மீட்பு படையினர் அனுப்பினர். அதற்கு முன்பாகவே, வேனில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும், 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் தாவணகெரே  மாவட்டம், வித்யாநகரை சேர்ந்தவர்கள் என்றும், அனைவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்றும் தெரிய வந்தது.

வெவ்வேறு இடத்தில் திருமணம் முடிந்து, வெவ்வேறு நிறுவனங்களில் இவர்கள் வேலை  பார்த்து வந்தாலும், அரசு விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா  செல்வது வழக்கம். அவ்வாறு இந்தாண்டு செல்லும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
லாரி டிரைவரின் கவனகுறைவால் இந்த விபத்து நடந்திருப்பதால்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.



Tags : Accident ,schoolgirls , Accident while traveling: 13 schoolmates tragically killed: 3 more worried
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...