திருவனந்தபுரம்: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த டிசம்பர் 30ம் மாலை திறக்கப்பட்டது. 31ம் ேததி முதல் மகரவிளக்கு பூஜைகள் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மகர ேஜாதி தரிசனம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதிலும், 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணைத்தை மாலை 6.30 மணியளவில் ஐயப்பன் விக்ரகத்துக்கு அணிவிக்கப்பட்டது. பிறகு, 6.40 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த சமயத்தில் பொன்னம்பல மேட்டில் 3 முறை மகர ஜோதி தரிசனம் தெரிந்தது.