புதுடெல்லி: ‘சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும்,’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நேற்று ஒன்பதாவது கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இதனையொட்டி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் விவசாயிகள் அதிகாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று விவசாயிகள் அதிகார தினம் கடைப்பிடிக்கப்பட்டது இதனையொட்டி, அனைத்து மாநில தலைநகரங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் நடந்த போராட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய ராகுல் காந்தி, ‘‘மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்வரை காங்கிரஸ் பின்வாங்காது.