சென்னை: ஜோயாலுக்காஸ் இந்த ஆண்டு பொங்கல் திருநாளை வாடிக்கையாளர்கள் வெகு விமரிசையாக கொண்டாட பொங்கல் பரிசு திருவிழாவை சர்வதேச ஜுவல்லரி கண்காட்சியுடன் ஏற்பாடு செய்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை நகை வாங்கும்போதும் நிச்சயப் பரிசு அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஜோயாலுக்காஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கநர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில் ‘‘எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த பொங்கல் திருநாளில், பொங்கல் பரிசுத் திருவிழாவை அளிப்பதில் மகிழ்ச்சி. மேலும் எங்களது சர்வதேச ஜுவல்லரி கண்காட்சியும் பொங்கல் பரிசுத் திருவிழாவுடன் இடம் பெறுகிறது. துபாய், பஹ்ரைன், துருக்கி, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பா உள்பட சர்வதேச நாடுகளின் அழகான டிசைன்கள் மற்றும் கலெக்ஷன்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது.