×

அண்ணணும் கிடையாது.. தம்பியும் கிடையாது சசிகலாவை உயர்த்தி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

சென்னை: ராயபுரம் தொகுதி சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பொங்கல் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில், அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று, பொதுமக்களுக்கு பொங்கல், இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  அதிமுகவில், சசிகலாவை யார் உயர்த்தி பேசினாலும், வால்பிடித்து பேசினாலும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்துக்கொண்டு அதிமுகவினர் செயல்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்கள் மீது கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும். அதிமுகவுக்கும், அமமுகவுக்கும் இருக்கும் பிரச்னை அண்ணன், தம்பி பிரச்னை. அவற்றை உட்கார்ந்து பேசி தீர்த்துக்கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.  தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவரும், இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்த கட்சியும் ஒருநாளும் அதிமுகவுடன் சேர முடியாது, அண்ணன் தம்பியாக இருக்க முடியாது.



Tags : Jayakumar ,brother ,Sasikala , No brother .. No brother If action is taken against Sasikala, action will be taken: Minister Jayakumar warns
× RELATED எண்ணி முடிக்கவே 2...