சென்னை: தமாகா துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர். மேலும் கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழக்கக்கூடிய பண்பாளர் ஞானதேசிகன் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.