×

இன்று திருவள்ளுவர் தினம் திருக்குறளை படியுங்கள்: இளைஞர்களுக்கு மோடி அறிவுரை

புதுடெல்லி: தமிழகத்தில் நேற்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடிய நிலையில், இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினமே திருவள்ளுவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘தமிழ் கவிஞர் மற்றும் துறவியுமான போற்றுதற்குரிய திருவள்ளுவரை வணங்குகிறேன். அவரது எண்ணங்களும், செயல்களும் அவருக்கு எவ்வளவு அறிவு இருந்தன என்பதைக் காட்டுகின்றன. அவரது கொள்கைகள் ஒவ்வொரு தலைமுறை மக்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை படிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.


Tags : Thiruvalluvar Day Thirukurala ,Modi , Today is Thiruvalluvar Day, to the youth, Modi's advice
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...