ஐதராபாத்: யாருடைய மனதும் புண்படாமல் பேசும் சிறந்த பண்பாளர் ஞானதேசிகன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். ஞானதேசிகன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மேலும் இயக்கங்களின் எல்லைகளைத் தாண்டி நட்பு பாராட்டியவர் இயற்கை எய்தியது வருத்தமளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.