மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் ஆவடி, கோணாம்பேடு கிராமத்தில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் ஆவடி மாநகரத்தில் இன்று மாலை நடைபெறும், மாபெரும் சமத்துவ பொங்கல் விழாவில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், ஆவடி மாநகரம், கோணாம்பேடு கிராமத்தில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா, இன்று மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தங்குகிறார். சிறப்பு அழைப்பாளராக, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, சமத்துவ பொங்கலிட்டு பேசுகிறார். முன்னதாக, பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி வரவேற்கிறார்.

மேலும், ஆவடி கிழக்கு நகர பொறுப்பாளர் பேபி வி.சேகர், ஆவடி தெற்கு நகர பொறுப்பாளர் ஜி.ராஜேந்திரன், ஆவடி வடக்கு நகர பொறுப்பாளர் ஜி.நாராயணபிரசாத் ஆவடி மேற்கு நகர பொறுப்பாளர் பொன்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில், மாநில மாணவரணி இணை அமைப்பாளர் பூவை சி.ஜெரால்டு, மாவட்ட துணை செயலாளர்கள் நடுகுத்தகை ஜெ.ரமேஷ், காயத்ரி தரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.ராஜி, ஜி.ஆர்.திருமலை, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் என்.இ.கே.மூர்த்தி, தி.வை.ரவி, பூவை ஜெயக்குமார், டி.தேசிங்கு, புஜ்ஜி ராமகிருஷ்ணன், காக்களூர் ஜெயசீலன், பூவை ரவிக்குமார், கோடுவள்ளி முரளி, வே.முனுசாமி மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வார்டு, வட்ட, கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்கின்றனர்.

Related Stories: