திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பைக் பின்னால் அமர்ந்து சென்று காதலனை குத்திக் கொன்ற காதலி: போலீசுக்கு தானே போன் செய்து சரண்

ஐதராபாத்: ஆந்திர மாநிலம், மலக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாவனி (21). இவரும், தாடேபல்லிகுடம் கிராமத்தை சேர்ந்த தத்தாஜி (22) என்பவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக தத்தாஜி, பாவனியை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். மேலும், அவரை திருமணம் செய்து கொள்வதற்கும் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால், காதலன் மீது பாவனிக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த திங்களன்று வெளியே செல்வதற்காக காதலனை போன் செய்து அழைத்துள்ளார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றியுள்ளனர். பின்னர், பாவனியை வீட்டில் விடுவதற்காக தத்தாஜி பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.

பின்னால் அமர்ந்திருந்த பாவனி, தன்னை ஏமாற்ற நினைக்கும் தத்தாஜியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதுகில் குத்தினார். அலறி துடித்த தத்தாஜி, நிலைத டுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது, பவானியும் கீழே விழுந்தார். அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், அதை எல்லாம் பெரிதாக நினைக்காமல் தத்தாஜியை கதற கதற கத்தியால் குத்துவதிலேயே கவனமாக இருந்தார். காதலனுக்கு பல இடங்களில் கத்தி குத்து விழுந்தது. இதில், ரத்த வெள்ளத்தில் தத்தாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பாவனியே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிந்த போலீசார் பாவனியை கைது செய்தனர். தத்தாஜியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: