டோக்கியோ : பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸில் இருந்து மாறுபட்ட புதிய கொரோனா வைரஸ் ஜப்பானில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுடன் வுகான் நகரத்தில் இருந்து கடந்த ஆண்டு வெடித்து கிளம்பிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 210க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வருகிறது. இதனிடையே கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு முதன்முதலில் அங்கீகாரம் வழங்கிய பிரிட்டனில் மரபணு மாற்றம் அடைந்த 2ம் வகை கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் ஜப்பானில் உருமாற்றம் அடைந்துள்ள 3ம் வகை கொரோனா கிருமியை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.