கேரளாவில் ஷிகெல்லா என்ற புதிய வகை தொற்று நோய்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ‘ஷிகெல்லா’ (Shigella) என்ற புதிய வகை தொற்று நோய் பரவி வருகிறது. மனிதக்கழிவு, அதில் கலக்கும் தண்ணீர் மூலம் இந்த நோய் பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை போல இதுவும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவி வருவதால், கோழிக்கோட்டில் வசித்து வரும் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.இந்த ஷிகெல்லா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எல்லா வயதினரையும் இந்த நோய் தாக்கி வருவதால் சுகாதாரத் துறையினர் வீடு, வீடாகச் சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: