காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நேற்று முன்தினம் இரவு அறுந்து கிடந்த மின்வயரை சரிசெய்ய சென்ற மின்வாரிய ஊழியர் உள்பட 2 பேர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தனர். காஞ்சிபுரம் அருகே பருத்தி குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியநாதன் (49). காஞ்சிபுரம் மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றினார். மதிமுக பிரமுகராகவும் இருந்தார். இவரது மனைவி சுசிந்திரா (39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் தயாளன் (39). அதே மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்தார். தேமுதிக பிரமுகர். இவரது மனைவி தீபா (37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். காஞ்சிபுரம் அருகே ஈஞ்சம்பாக்கம் வயல்வெளி பகுதியில் மின்வயர்கள் அறுந்து கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் காஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாக்கியநாதன், தயாளன் ஆகியோர் சென்றனர்.