×

திருவள்ளூர், பொன்னேரியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: டெல்லியில் அடக்கு முறைக்கு அஞ்சாமல் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ள மத்திய அரசு மற்றும் அதற்கு துணை போகும் மாநில அரசை கண்டித்தும் திருவள்ளூரில் மத்திய, மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் ஆவடி சா.மு.நாசர், திருத்தணி எம்.பூபதி ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிட பக்தன், ஆர்.டி.இ.ஆதிசேஷன், சி.ஜெரால்டு, ஒ.ஏ.நாகலிங்கம், காயத்ரி ஸ்ரீதரன், கே.சத்யராஜ், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் சி.சு.ரவிச்சந்திரன், கூளூர் எம்.ராஜேந்திரன், பூவை எம்.ஜெயக்குமார், டி.தேசிங்கு, மோ.ரமேஷ், பூவை எம்.ரவிக்குமார், என்.இ.கே.மூர்த்தி, கே.அரிகிருஷ்ணன், ச.மகாலிங்கம், டி.கிரிஸ்டி, தி.வே.முனுசாமி, தி.வை.ரவி, ஆரத்தி ரவி, சண்முகம், பழனி, ரவீந்திரா மற்றும் எம்.பன்னீர்செல்வம், ஈக்காடு கே.முகமது ரபிக், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பொன்னேரி: பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் மத்திய பாஜ அரசை கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் முன்னாள் துவக்கி வைத்தார்.  இதில் அவைத்தலைவர் பகலவன், முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, துணை செயலாளர்கள் கதிரவன், டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், தமிழன் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள்  சுகுமாரன், வல்லூர் ரமேஷ்ராஜ், சேழவரம் செல்வசேகரன், எல்லாபுரம்மூர்த்தி, நகர செயலாளர்கள் பொன்னேரி டாக்டர் விஸ்வநாதன், மீஞ்சூர் மோகன்ராஜ், ஆரணி வெங்கடேசன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி பூமிநாதன், குணசேகர், பாஸ்கர் சுந்தரம், ஆனந்தகுமார், மீஞ்சூர் சுப்பிரமணி, மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, பொன்னேரி வாசுதேவன், ராமலிங்கம், ஈஸ்வரன், பழவேற்காடு அலவி, வெற்றி, ஜமுனா ரஜினி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Tags : DMK ,protest ,Ponneri ,Tiruvallur , DMK protest in Ponneri, Tiruvallur
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி