கொல்கத்தா: ஹெல்மெட் அணியாத பைக் ஓட்டிகளுக்கு பெட்ரோல் போடக் கூடாது என, கொல்கத்தாவில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு போலீசார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் வருபவர்களின் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடக்கூடாது என்ற உத்தரவை சென்னை போலீஸ் ஆணையர் சமீபத்தில் உத்தரவிட்டார். இது, விரைவில் அமலுக்கு வர உள்ளது. இதே பாணியை பின்பற்றி, கொல்கத்தா போலீசாரும் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஆனால், சென்னை போலீசை விட ஒருபடி மேலே சென்று. பைக்கின் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிந்து இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், பெட்ரோல் போடக் கூடாது என கொல்கத்தா மாநகர ஆணையர் உத்தரவிட்டுள்ளார். வரும் 8ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 2ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும், ஹெல்மெட் வாங்க முடியாதவர்கள் காவல் நிலையங்களில் பெயர்களை பதிவு செய்தால், அவர்களுக்கு அரசு உதவி அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.