சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்ட விவகாரம் கடந்த 2013ல் உயர் மட்ட குழு கூடியதா? என்பது தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தின் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து விளையாட்டு ஆணையம் கடந்த 2012ல் ரூ.3 ஆயிரமாக ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஓய்வூதியம் பெறுவதற்கு பலர் விண்ணப்பித்தனர். இந்த நிதியில் திடீரென கடந்த 2013ல் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்க அப்போது உறுப்பினர் செயலாளராக இருந்த ராஜாராமன் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் கூடி திடீரென முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த 2013 நவம்பர் 23ம் தேதி 4 உறுப்பினர்களை கொண்டு கமிட்டி கூடியதாக எந்த வித முகாந்திரமும் இல்லை.