×

எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு: தா.பாண்டியன் உள்பட 8 பேருக்கு விருது

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சாதனையாளர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது எஸ்.டி.பி.ஐ. கட்சி. அதன்படி காயிதே மில்லத் விருது-தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்), தந்தை பெரியார் விருது- தியாகு (தமிழ்த்தேச மக்கள் கட்சி பொதுச்செயலாளர்), டாக்டர் அம்பேத்கர் விருது-டி.எம்.உமர் பாரூக் (மறைவு)  (நிறுவனர், நீலப்புலிகள் இயக்கம்), காமராஜர் விருது-பேராசிரியர் சாதிக் (சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்), பழனிபாபா விருது-காயல் மகபூப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர், கவிக்கோ விருது- கவிமாமணி பேரா. தி.மு.அப்துல் காதர் (வாணியம்பாடி இஸ்லாமிய  கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர்), அன்னை தெரசா விருது- பேராசிரியர் தீபக் (டிசம்பர் 3 இயக்கம் தலைவர்), நம்மாழ்வார் விருது சரோஜா தேவி (இயற்கை விவசாயி). இவர்களுக்கு வருகிற 17ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Tags : persons ,STBI Party Announcement: Award ,D.Pandian , STBI Party Announcement: Award to 8 persons including D.Pandian
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...