பராமரிப்பில்லாமல் சமூகவிரோதிகளின் கூடாரமாகும் விருதுநகர் நகராட்சி சமுதாயக்கூடம்

விருதுநகர்: பராமரிப்பு இல்லாததால் விருதுநகர் நகராட்சி சமுதாயக்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. விருதுநகர் அகமதுநகரில் நகராட்சி பூங்காவில் மாவட்ட மைய நூலகம் இயங்கி வருகிறது. இதன் பின்புறத்தில் நகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமுதாயக்கூடம், மேல்நிலைத்தொட்டி அடங்கிய பூங்காவில் சுற்றுச்சுவர் வசதி இல்லை. மைய நூலக கட்டிடத்தின் பின்புறத்தில் சமுதாயக்கூடம் மறைவாக இருப்பதால் அதன் முன்பகுதியை பகல், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் நகராட்சி சமுதாயக்கூடத்தை முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தால் தற்போது சுபநிகழ்ச்சிகளுக்கு மக்கள் வாடகைக்கு எடுப்பதை நிறுத்தி விட்டனர். நகராட்சி நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதுடன், சமுதாயக்கூடத்தை உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டுமென அகமதுநகர் மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: