தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று கழிமுகத்துவாரம் பகுதியில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படவில்லை. இனால் படகுகள் அனைத்தும் கரையில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. புயல் சின்னம் காரணமாக கடல் பகுதிகள் நேற்று வழக்கத்திற்கு மாறாக சீற்றம் இல்லாமல் அமைதியாகவே காணப்பட்டது. தூத்துக்குடி ரோச் பூங்கா தென்புறம் உள்ள உப்பாறு கழிமுகத்துவார பகுதி, தெற்கு பீச்ரோட்டில் உள்ள வியூ பாய்ண்ட் கடல் பகுதி ஆகிய இடங்களில் தண்ணீர் வற்றி கடல் உள்வாங்கிய நிலையில் காணப்பட்டது.