அரபிக்கடலின் மீது நாளை மேலடுக்கில் சுழற்சி உருவாக உள்ளதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: அரபிக்கடலின் மீது நாளை மேலடுக்கில் சுழற்சி உருவாக உள்ளதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று நள்ளிரவு வரை மேற்கு கடற்கரையில் பொழியூர் - கோழிக்கோடு இடையே ராட்சத அலைகள் எழும். லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை வரை பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். மணிக்கு 55 கி,மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் குமரி, அரபிக் கடலில் கொந்தளிப்பு ஏற்படும். கடல் கொந்தளிப்பால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: