சென்னை: புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை மாநகருக்கு அமைச்சர் ஜெயகுமார், மாபா.பாண்டியராஜன், கடலூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத், திருவாரூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், காமராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.