கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகேயுள்ள பெருமாள் ஏரியிலிருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீரால் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குள்ளஞ்சாவடி அருகேயுள்ள பெருமாள் ஏரியில் இருந்து நேற்று 12,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 19,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.