சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.