சென்னை: மன்னார் வளைகுடா பகுதியில் 30 மணி நேரத்திற்கும் மேலாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மேலும், சில மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அங்கே நிலை கொண்டு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த பகுதியாக வலுவிழக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.