திருவள்ளூர்: அஸ்ஸாம் மாநிலம் சில்சாகர் மாவட்டம் பாலியாகட் அஞ்சல் ரிப்பைமுக் கிராமத்தை சேர்ந்தவர் அத்தூல் சந்திர தாஸ்(58). சிஆர்பிஎப் வீரரான இவர் கடந்த 6.7.1996ம் தேதி இரவு சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது உடன் பயணித்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா கூப்பிட்டான் பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா(36) என்பவர் உட்கார இருக்கை தராததால் 2 பேருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அத்தூல் சந்திர தாஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராஜாவை சுட்டார். அதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த 14.7.1996ம் தேதி அத்தூல் சந்திர தாஸை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.