கூடுவாஞ்சேரி: வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் தறிக்கெட்டு ஓட்டிய கார் சென்டர் மீடியனில் மோதி 5 பல்டி அடித்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், இருந்த கல்லூரி மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், தேவநேசன் நகரை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் வீரா (22). கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படிக்கிறார். நேற்று காலை கல்லூரிக்கு காரில் சென்ற வீரா, மதியம் வீட்டுக்கு புறப்பட்டார். ரத்தினமங்கலத்தில் இருந்து கொளப்பாக்கம் நோக்கி சென்றபோது, திடீரென கார் தறிக்கெட்டு ஓடியது.