தமிழகத்தில் 1,387 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிழகத்தில் புதிதாக பேருக்கு 1,387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. 15  பேர் மட்டும் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில்  நேற்று 70,378 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,387 பேருக்கு தொற்று   உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 356 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 7 லட்சத்து 87 ஆயிரத்து 554 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும்  1,426 பேர்  குணமடைந்துள்ளனர். தற்போது வரை 7 லட்சத்து 64 ஆயிரத்து 854 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 ஆயிரத்து 938 பேர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 15 பேர் சிகிச்சை பலனின்றி   உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 8 பேர், அரசு  மருத்துவமனையில் 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மொத்த  மரணங்களின் எண்ணிக்கை 11,762 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: