சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல், 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல். இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது தண்ணீர் இருப்பு 2,936 மில்லியன் கன அடி. ஏரியின் உயரம் 21.20 அடி. கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து 20 அடி வரை நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது புழல் ஏரி. தொடர் மழையின் காரணமாக விநாடிக்கு 1,800 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, 153 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், தொடரும் கனமழையால், புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.