மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்

சென்னை: மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல்  ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம், இன்று காலை 10 மணிக்கு, அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ  கருத்துரை ஆற்றுகிறார் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: