ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

சென்னை:  சென்னை வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் திவாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மத்திய பணியாளர், பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியர் குறைதீர் அமைச்சகத்தின் உத்தரவுப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியை  சேர்ந்த வருமான வரித்துறை ஓய்வூதியர்களுக்காக குறைதீர் கூட்டம் (பென்ஷன் அதாலத்) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த கூட்டம், நுங்கம்பாக்கம் வைகை அரங்கத்தில் வரும் 16ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை  நடைபெறும். தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வருமான வரித்துறை ஓய்வூதியதாரர்கள், தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை, வரும் 14ம் தேதிக்கு முன்பாக, சிறப்பு அதிகாரியான நிர்வாக அதிகாரி சுந்தரிடம் 044-28333252 என்ற  எண்ணில் வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: