சென்னை: தமிழகத்தில் மேலும் 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,87,554ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,
* தமிழகத்தில் மேலும் 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,87,554ஆக அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,64,854 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,426 பேர் குணமடைந்துள்ளனர்.* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,762 ஆக உயர்ந்துள்ளது.* சென்னையில் இன்று ஒரே நாளில் 356 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,16,867 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை 1,23,34,447 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 70,378 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* தமிழகத்தில் மொத்தம் 227 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 67; தனியார் மையங்கள் 160.* தமிழகத்தில் தற்போது 10,938 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,75,883 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 847 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,11,637 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 544 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.