டிசம்பர் 7ஆம் தேதி முதல் சென்னை புறநகர் சிறப்பு ரயில்களின் சேவை 244ல் இருந்து 320ஆக அதிகரிப்பு

சென்னை: டிசம்பர் 7ஆம் தேதி முதல் சென்னை புறநகர் சிறப்பு ரயில்களின் சேவை 244ல் இருந்து 320ஆக அதிகரிக்கப்பட உள்ளது. புறநகர் சிறப்பு ரயில்களில் கூட்டநெரிசல் இல்லா நேரத்தில் பெண் பயணிகள் பயணிக்கும் நேரத்தை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 7-9:30 மணி வரையும், மாலை 4:30 முதல் இரவு 7 மணி வரையும் பெண் பயணிகள் பயணிக்கலாம் என ரயில்வே அறிவித்துள்ளது. அத்தியாவசிய பணியாளர் பட்டியலில் வரும் பெண் பயணிகள் எல்லா நேரங்களிலும் பயணிக்க கட்டுப்பாடு இல்லை.

Related Stories: