மதுரை: சூரப்பா விவகாரத்தில் கல்லூரிகள், மாணவர்களின் நலன்கருதி வேந்தர் மற்றும் தமிழக அரசு உரிய முடிவு எடுப்பார்கள் என நீதிமன்றம் நம்புகிறது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிப்பதற்கு விசாரணை கமிஷன் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தன்னையும் வழக்கில் சேர்க்க கோரி அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.