சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கலைஞர் நகரின் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. சண்முகம் சாலை, கன்னிகாபுரம் சாலை, முனுசாமி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையில் தேங்கிய வெள்ளம் காரணமாக இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.